Thursday, 11 July 2019

5. எங்கிருந்தும் கற்றுக்கொள் 


வாழ்க்கை கடல் போல, ஆசை அலை போல, மனிதர் படகு போல். அலை மோதும் படகு ஆட்டம் கண்டாலும் நிமிர்ந்து நின்றால் கரையில் சேர்ந்துவிடும். இன்றைய வாழ்வே நேற்றைய மனிதரின் ஆசைக் கனவுதான் இல்லையா? அதாவது ஆசை நியாயமானதாக இருந்து நாம் நேர்மையான வழியைப் பின்பற்றுவோம் ஆயின் விளைவு நன்மையாக மட்டுமே இருக்க முடியும் என்பதாகும். ஆசையே மாயை, மாயையே ஆசை, ஆசையே அழிவென்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். நன்றாக யோசித்துப் பாருங்கள், ஆதிகால மனிதர்களை. எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பார்கள் எத்தனை பிரச்சினைகளுக்கிடையில் வாழ்ந்திருப்பார்கள். 

Wednesday, 3 July 2019

4. தன்னம்பிக்கை


பஞ்ச பூதங்களில் கலந்துள்ள இறை சக்தியின் ஒரு துகளே, மனிதர்கள் நம்மில் உயிர் சக்தியாக இருக்கின்றது. மனிதன் நம்பிக்கை மயமானவன். நம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதரின் இயல்புக்கும் தக்கபடி அவரவரிடம் காணப்படும் ஒன்றாகும். "நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகின்றாய்" என்கிறது நம் சமயம். எனவே நாம் ஒவ்வொருவரும் எம்மில் நம்பிக்கை பெருகும் வண்ணம் எமது இயல்புகளை   வளர்த்துக்கொள்ள வேண்டும்.

                                                   ஆண்மை தவறேல்   நாம் அனைவரும் ஔவையார் எழுதிய நீதி  நூலான ஆத்திசூடியை கேள்விப்பட்டிருப்போம்...